நுழைவுத் தேர்வு: மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று நியமித்துள்ளது.
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு நடப்பாண்டிலேயே நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் முதல் கட்ட நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் நுழைவுத் தேர்வு தொடர்பான மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
நீதிபதி அனில் ஆர் தவே தலைமையிலான ஏகே சிகிரி, ஆர்கே அகர்வால், ஏகே கோயல் மற்றும் பானுமதி ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது. இதில் முன்னாள் சிஏஜி வினோத்ராய் மற்றும் ஷிவ்ஷரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு அடுத்த ஒராண்டுக்கு மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கையை கண்காணிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இதனிடையே மாநிலங்களே நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதி கோரி உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications