For Daily Alerts
Just In
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்!
டெல்லி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் அளித்துள்ளது.
நாடை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் லாலு பிரசாத் யாதவின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் தமக்கு ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது.
அத்துடன் ஜாமீன் நிபந்தனைகளை அமல்படுத்துவது தொடர்பாக விசாரணை நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
Comments
English summary
Supreme Court grants bail to RJD chief Lalu Prasad Yadav in a fodder scam case.
Story first published: Friday, December 13, 2013, 12:29 [IST]