ரூபாய் நோட்டு வழக்குகள்- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்- மத்திய அரசுக்கு நோட்டீஸ்
ரூபாய் நோட்டு தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டுகள் தொடர்பான அனைத்து வழக்குகளுடம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு 6 வாரத்துக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். இதையடுத்து மக்களிடத்தில் பணத் தட்டுப்பாட்டு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு நாடியது.
மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் ரூபாய் நோட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்குகள் அனைத்தும் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக 9 கேள்விகளை எழுப்பியுள்ள நீதிபதிகள், இது தொடர்பாக அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டனர்.
அத்துடன் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications