கோரக்பூர் குழந்தைகள் இறப்பு விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
கோரக்பூரில் 63 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தானாக முன்வந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி : உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவத்ததோடு, இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஆலோசனை வழங்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் 63 குழந்தைகள் அரசால் நடத்தப்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமைனையில் உயிரிழந்தனர். குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் குழாய் சிகிச்சைக்கு இல்லாததே அடுத்தடுத்து 5 நாட்களில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே குழந்தைகள் இறப்புக்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறியுள்ளனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறந்த குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு மருத்துவமனையை விட்டு செல்லும் பெற்றோர் பார்க்கும் அனைவரும் களங்கிச் செல்கின்றனர்.

அலட்சியம் காரணமா?
ஆக்சிஜன் விநியோகிக்கும் நிறுவனத்திற்கு பாக்கி வைத்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இது குறித்து இரண்டு முறை மருத்துவமனை ஊழியர்கள் நிர்வாகத்திற்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

விசாரணைக்கு உத்தரவு
ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் நேற்று மருத்துவமனையை பார்வையிட்ட பின்னர் உறுதியளித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்நிலையில் கோரக்பூர் சம்பவத்தை தாமான முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், சந்திராசத் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு மறுத்து விட்டது.

விசாரணைக்கு மறுப்பு
இது குறித்து சிறப்பு விசாணை ஆணையம் அமைக்கும் உத்தரவையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த விவகாரம் மாநில அரசு தொடர்புடையது என்பதால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய வாதத்தை முன்வைக்குமாறும் அவர்கள் கூறிவிட்டனர்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications