For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியின் ஓய்வுக்கு தடை கோரி ஜெ. மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

SC reserves verdict on CM’as palea
டெல்லி: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி ஓய்வு பெறாமல் தொடர்ந்து விசாரணை நடத்த கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி இம்மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். ஆனால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி அவரே வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் போடப்படுவதால் தொடர்ந்து 17 ஆண்டுகளாக வழக்கு தள்ளிப்போவதாக வாதிட்டார். நீதிபதி பதவி காலத்தை நீட்டிக்க கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தொடரக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு முடியும் நிலையில் நீதிபதியையும், வழக்கறிஞரையும் மாற்றினால் மீண்டும் விசாரணை தாமதப்படும் என்று கூறினார்.

மேலும் நீதிபதியின் பதவிகாலத்தை நீட்டிக்க கர்நாடக அரசின் சட்டத்தில் இடம் உள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

English summary
The Supreme Court on Wednesday reserved its verdict on petitions filed by Chief Minister Jayalalithaa and three other accused in the disproportionate assets case challenging the removal of the Special Public Prosecutor Bhavani Singh for conducting the trial and the in a Bangalore court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X