இத்தனை வருஷமா விசாரணையா... எப்போதுதான் முடியும் ராஜிவ் கொலை வழக்கு... சுப்ரீம்கோர்ட் சாட்டையடி
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை எப்போதுதான் முடியும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவானது ராஜிவ் கொலை வழக்கின் சதி குறித்து விரிவாக விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணை நடத்திக் கொண்டே இருக்கிறது. இதுவரை ராஜிவ் கொலையின் சதிகாரர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பல்நோக்கு கண்காணிப்புக் குழு வெளியிடவும் இல்லை.

பல்நோக்கு கண்காணிப்பு குழு
இதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். அதில், சிபிஐ அதிகாரிகளைக் கொண்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்னதான் செய்கிறது? உண்மையான சதிகார்கள் யார்? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளனின் கேள்விக்கு பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சரமாரி கேள்விகள்
இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமரேந்திர சரணிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

என்னதான் நடவடிக்கை?
இத்தனை ஆண்டுகாலமாக ஒரு வழக்கில் விசாரணை நடைபெறுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது; விசாரிக்கப்படவேண்டிய வெளிநாட்டு நபர்களைக் கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

அதிரடி உத்தரவு
இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர், சதிகாரர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை தேடி பிடிப்பதில் சிக்கல் உள்ளதாகக் கூறினார். இதனையடுத்து கால நிர்ணயம் இல்லாமல் விசாரணை நடத்தி வருவது அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், இது சிபிஐயின் இயலாமையை வெளிப்படுத்துவதாகக் கூறி 4 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications