இத்தனை வருஷமா விசாரணையா... எப்போதுதான் முடியும் ராஜிவ் கொலை வழக்கு... சுப்ரீம்கோர்ட் சாட்டையடி
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை எப்போதுதான் முடியும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவானது ராஜிவ் கொலை வழக்கின் சதி குறித்து விரிவாக விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணை நடத்திக் கொண்டே இருக்கிறது. இதுவரை ராஜிவ் கொலையின் சதிகாரர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பல்நோக்கு கண்காணிப்புக் குழு வெளியிடவும் இல்லை.

பல்நோக்கு கண்காணிப்பு குழு
இதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். அதில், சிபிஐ அதிகாரிகளைக் கொண்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்னதான் செய்கிறது? உண்மையான சதிகார்கள் யார்? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளனின் கேள்விக்கு பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சரமாரி கேள்விகள்
இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமரேந்திர சரணிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

என்னதான் நடவடிக்கை?
இத்தனை ஆண்டுகாலமாக ஒரு வழக்கில் விசாரணை நடைபெறுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது; விசாரிக்கப்படவேண்டிய வெளிநாட்டு நபர்களைக் கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

அதிரடி உத்தரவு
இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர், சதிகாரர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை தேடி பிடிப்பதில் சிக்கல் உள்ளதாகக் கூறினார். இதனையடுத்து கால நிர்ணயம் இல்லாமல் விசாரணை நடத்தி வருவது அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், இது சிபிஐயின் இயலாமையை வெளிப்படுத்துவதாகக் கூறி 4 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications