ராம்தேவ் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை.. 10 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு!
டெல்லி: தலித்களை இழிவுபடுத்தியதாக ராம்தேவ் மீது தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
யோகா குரு என்று சொல்லிக் கொள்ளும் கார்ப்பொரேட் சாமியார் ராம்தேவ், பாஜகவுக்கு ஆதரவாள பிரச்சாரம் செய்தார் இந்த தேர்தலில். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின் போது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தலித் இனத்தவரின் வீடுகளுக்கு தேனிலவு செல்வதாக கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக லக்னோ தொடங்கி பரவலாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ் சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது வலுக்கட்டாயமான நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை லக்னோவுக்கோ அல்லது நீதிமன்றம் விரும்புகிற இடத்திலோ ஒரே வழக்காக இணைக்கவும் உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து, இந்த விவகாரத்தில் ராம்தேவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், அவருக்கு எதிராக புகார் செய்தவர்களின் பயணச்செலவு, ஆவணங்களை ஒரே இடத்தில் சேர்ப்பதற்கான செலவு போன்றவற்றுக்காக ராம்தேவ் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு பதிவாகி உள்ள மாநிலங்களுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
மொத்தம் 12 வழக்குகள் ராம்தேவ் மீது பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications