புதிய நீதிபதிகள் நியமனம்:பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப நேரிடும்-தலைமை நீதிபதி வார்னிங்
நீதிபதிகள் நியமனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
டெல்லி: புதிய நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதித்து வருவது குறித்து தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடியின் அலுவலக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்றும் தலைமை நீதிபதி தாக்கூர் எச்சரித்துள்ளார்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் மத்திய பாஜக அரசு இதை மாற்றி அமைத்தது.

மத்திய அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதன் பின்னர் புதிய நீதிபதிகள் நியமன பட்டியலை 'கொலிஜியம்' மத்திய அரசிடம் பரிந்துரைத்தது. இதுவரை இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.
இது தொடர்பாக பலமுறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பி 9 மாதங்களாகியும் ஏன் ஒப்புதல் தரவில்லை என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் ரோத்தகிக்கு தலைமை நீதிபதி தாக்கூர் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாததால் நீதிமன்ற அறைகள் மூடப்பட்டிருக்கின்றன. நாங்கள் தொடர்ந்தும் பொறுமை காக்க முடியாது; இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் நேரிடும் எனவும் தலைமை நீதிபதி தாக்கூர் எச்சரித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications