ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் திட்டியதை மனதில் வைத்து பள்ளி மற்றும் காவல் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக 11ம் வகுப்பு மாணவர் எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பயாக்பூர் காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் அவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். வியாழக்கிழமை அவர் வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் அம்பரீஷ் திவாரி ராஜாவை திட்டியுள்ளார். இதையடுத்து அன்று இரவு ராஜா ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
அதில் உங்களையும் வைத்து பள்ளியை குண்டு வைத்து தகர்ப்பேன், ஜெய் பாக்தாதி என்று ஐஎஸ்ஐஎஸ் தலைவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த திவாரி எஸ்.எம்.எஸ். வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. உடனே அவர் அந்த எஸ்.எம்.எஸ்.-ஐ போலீஸ் அதிகாரி பவன் சிங்கிற்கு அனுப்பினார். அவரும் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் அவருக்கும் அதே செல்போன் எண்ணில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.
அதில், காவலாளிகளுடன் காவல் நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே போலீசார் விசாரணை நடத்தி எஸ்.எம்.எஸ். வந்த செல்போன் எண் ஒரு மாணவருடையது என்பதை கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே ராஜாவை அவரது தந்தையே அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் திட்டியதற்கு என் மகன் இவ்வாறு செய்துவிட்டான் என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications