ராம் ரஹீம் சிங்கின் சிர்சா தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை... ராணுவம் குவிப்பு!
ராம் ரஹீம் சிங்கின் சிர்சா தலைமை அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகர்: பலாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா, சிர்சா தலைமை அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற சாமியார் ராம் ரஹீம் சிங், தற்போது சிறையில் உள்ளார். இவர் சிறைக்கு செல்லும் போதே இவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், ஹரியானாவின் சிர்சாவில் உள்ள தேரா சச்சா அமைப்பின் தலைமை அலுவலகத்தை முற்றிலுமாக சுற்றி வளைத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் போது ஊடகங்களும் பத்திரிகைகளும் அங்கு செல்லக் கூடாது என்பதற்காக, தேரா சச்சா தலைமை அலுவலகத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் தான் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Latest visuals from Sirsa: Heavy security deployed, curfew imposed in vicinity of #DeraSachaSauda HQ as search inside the premises continues pic.twitter.com/u1xeSjFVP0
— ANI (@ANI) September 8, 2017
அதுமட்டுமில்லாமல், இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்துக்குள் தேடுதல் வேட்டையில் ராணுவம், துணை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் இவர்கள் அனைவருக்கும் பொட்டல சாப்பாட்டுக்கும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Latest visuals from Sirsa: Heavy security deployed, curfew imposed in vicinity of #DeraSachaSauda HQ as search inside the premises continues pic.twitter.com/u1xeSjFVP0
— ANI (@ANI) September 8, 2017
தேரா சச்சா அமைப்பு 600 ஏக்கரில் பரந்து விரிந்து உள்ளது. ராம் ரஹீம் சிங்கை எதிர்த்துப் பேசியவர்கள் மற்றும் செயல்பட்டவர்கள் பிணமாக்கப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பிலிருந்து வெளியேறி வந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Sirsa: Security personnel & concerned officials entered premises of #DeraSachaSauda HQ to conduct search as ordered by Punjab & Haryana HC pic.twitter.com/YST6xgiBVs
— ANI (@ANI) September 8, 2017
உடல்களை புதைத்து அதன் மேல் மரத்தை நட்டு வைப்பதை அங்கு வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த சோதனையின் மூலம் இதுகுறித்த உண்மை தகவல்கள் வெளிவரலாம்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications