உ.பி. சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுக்க நாளை கூடுகிறது பாஜக செயற்குழு- பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு நாளை அலகாபாத்தில் கூடுகிறது.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் வென்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக மும்முரமாக இருந்து வருகிறது.

Security beefed up in Allahabad for BJP's national executive meet

இதன் ஒரு கட்டமாக அலகாபாத்தில் நாளை பாஜகவின் செயற்குழு கூடுகிறது. அலகாபாத் நகரில் உள்ள கயாஸ்தா பாடசாலை திடலில் நாளையும் நாளை மறுநாளும் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் பாஜக மேலிட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் இருந்து அலகாபாத் நகருக்கு விமானம் மூலம் வந்து சேர்கிறார். அலகாபாத் நகரில் தங்கியிருக்கும் அவர் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி அலகாபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் பின்னர் நாளை மறுநாள் அலகாபாத் நகரில் உள்ள சங்கம் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+