சர்வதேச எண்ணில் இருந்த வந்த 'அந்த' அழைப்பு: டெல்லி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: மர்ம நபர் பற்றி வெளிநாட்டில் இருந்து வந்த போன் அழைப்பால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை இரவு 7 மணிக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்துப் பேசியபோது, டெல்லியில் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு ஒருவர் ஜெர்மனிக்கு செல்கிறார் உஷார் என்று கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விமான நிலைய அதிகாரி டி.கே. குப்தா கூறுகையில்,
இது புரளியை கிளப்பும் அழைப்பு இல்லை. சர்வதேச எண்ணில் இருந்து இந்த அழைப்பு வந்துள்ளது. இன்டர்நெட் மூலம் கால் செய்யப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கிறோம் என்றார்.
பதன்கோட் தாக்குதலை அடுத்து ஏற்கனவே டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்குள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் ஊருவியிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் வரும் 26ம் தேதி வரை டெல்லியில் பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும்.
டெல்லியில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications