Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி? கான்வாய்க்குள் அத்துமீறி நுழைந்த கார்.. பரபரத்த அதிகாரிகள்

அகர்தலாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அமித்ஷா புறப்பட்டு சென்ற போது அவரது கார் கான்வாய்க்குள் அத்துமீறி ஒரு கார் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்று இருந்தார். அகர்தலாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அமித்ஷா புறப்பட்டு சென்ற போது அவரது கார் கான்வாய்க்குள் அத்துமீறி ஒரு கார் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று திரிபுரா மாநிலம் சென்றார்.

சமீபத்தில் தான் அங்கு சட்டமன்ற தேர்தல் முடிந்தது. இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மாணிக் சகா இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளார்.

அத்துமீறி நுழைந்த கார்

அத்துமீறி நுழைந்த கார்

இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவரும் திப்ரா மோதா கட்சியின் தலைவருமான பிரத்யோட் மணிக்யா தெப்புர்மாவை நேற்று அமித்ஷா சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக இந்த சந்திப்பு இரு தலைவர்களும் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷாவின் இந்த திரிபுரா பயணத்தின் போது அவரது வாகன அணிவகுப்பிற்குள் அத்துமீறி நுழைந்த காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு வாகனங்கள்

பாதுகாப்பு வாகனங்கள்

பாதுகாப்பில் இருக்கும் அமித்ஷாவின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுத்து செல்லும். அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அமித்ஷாவின் கார் அணிவகுப்பில் செல்ல அனுமதி அளிக்கப்படுவதுண்டு. இந்த நிலையில், அகர்தலாவில் இருந்து மாநில அரசின் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து அமித்ஷா கார் புறப்பட்டு சென்றது. அமித்ஷாவின் கார் கான்வாய் சென்று கொண்டிருந்ததால் பிரிவு சாலை ஒன்றில் பொதுமக்களின் வாகனங்களை பாதுகாப்பு படையினர் நிறுத்தி வைத்து இருந்தனர்.

 நிற்காமல் சென்ற கார்

நிற்காமல் சென்ற கார்

அப்போது திடீரென வெள்ளை நிற டாடா டைகோர் கார் ஒன்று அமித்ஷாவின் கார் கான்வாய்க்குள் அத்து மீறி நுழைந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் காரை நிறுத்த முயற்சித்த போதும் கார் நிற்காமல் சென்று விட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபேற்று வருவதக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக கடந்த ஆண்டு அமித்ஷாவின் மும்பை பயணத்தின் போது அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு இருந்தது.

 வித்தியாசமான ஒரு நபர்

வித்தியாசமான ஒரு நபர்

ஆந்திர பிரதேச பாஜக எம்.பியின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு 32-வயது நபர் ஒருவர் பாதுகாப்பை மீறி அமித்ஷாவிற்கு நெருக்கமாக சுற்றிக்கொண்டு இருந்தார். மேலும் முக்கிய அரசியல் தலைவர்களுடனும் காணப்பட்டார். வித்தியாசமான ஒரு நபர் அமித்ஷா, முக்கிய தலைவர்களுடன் காணப்பட்டதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர், அவரது பெயர் ஹேமந்த் பவார் எனவும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவரின் உதவியாளர் என்று கூறினார். ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் போலியான நபர் என்று தெரியவந்தது. இதையடுத்து கைது செய்து இருந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+