பாதுகாப்பு, திறன் மேம்பாடு – இவைதான் டெல்லியில் நாளை நடைபெறும் ஆளுநர் மாநாட்டின் டாப்பிக்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நாளை குடியரசுத்தலைவர் தலைமையிலான மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் இரண்டு நாள் மாநாடு தொடங்குகிறது.
குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவிவேயற்ற பிறகு அவரது தலைமையில் நடைபெறும் மூன்றாவது மாநாடு ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விவகாரங்கள், அரசுத் திட்டங்களுக்கான நிதித் தேவைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல், வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னைக்குத் தீர்வு காணுதல் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் விவாதிக்க உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி, பிரதமர் நரேந்திமோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications