அரவிந்த் கேஜ்ரிவால் மீதான தேச துரோக வழக்கு வாபஸ்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது விபோர் ஆனந்த் என்ற சட்டக் கல்லூரி மாணவர் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த 2012 ஆம் ஆண்டு காசியாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் இருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் பேசியுள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள கேஜ்ரிவால் சிறந்த முறையில் செயல்படுகிறார். அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிரமாக பாடுபட்டு வருகிறார். எனவே, கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடர்ந்த தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் விபோர் ஆனந்த் வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகி கூறினார்.
அதை ஏற்று கொண்ட நீதிபதி புருஷோத்தம் பதக், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதித்தார்.












Click it and Unblock the Notifications