இஸ்ரோவுக்குள் நுழைந்து திடீரென தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

Protest
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவில் மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த விஞ்ஞானிகளுக்கு ஒருங்கிணைந்த ஆந்திரா கோரி தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் அதிர்ச்சி அளித்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று பிற்பகல் 2.38 மணிக்கு மங்கள்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

அப்போது உள்ளூர் ஆந்திரா செய்தியாளர்களுடன் இணைந்திருந்த தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் திடீரென பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர். ஒருங்கிணைந்த ஆந்திரா கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் போராட்டம் நடத்துவது செய்தியாளர்களா? போராட்டக்குழுவினரா என்ற குழப்பம் ஏற்பட்டது.

மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. தேசிய ஊடகங்கள் முன்னிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தவே இப்போராட்டம் நடத்தப்பட்டதாக தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+