டோணி வைத்த கோரிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு டிஸ்மிஸ் செய்த பாட்டீல் அன் கோ!!
மும்பை: முரளி விஜய்யை சேர்க்க வேண்டும். வருண் ஆரோனை சேர்க்க வேண்டும் அது முடியாவிட்டால் மோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும். இதெல்லாம் கேப்டன் டோணி தேர்வுக் குழுவிடம் வைத்த கோரிக்கைகள். ஆனால் அனைத்துக் கோரிக்கைகளையும் தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாம்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு சந்தீப் பாட்டீல் தலைமையில் கூடி நேற்று அறிவித்தது. இதில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்டன் என்ற முறையில் டோணி வைத்த கோரிக்கை அனைத்தையும் தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள டோணியுடன், வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தி அணியைத் தேர்வு செய்தனர். அப்போது 3 கோரிக்கைகளை வைத்துள்ளார் டோணி.
1. கூடுதல் தொடக்க வீரராக முரளி விஜய்யை சேர்க்க வேண்டும்.
2. 5 வது வேகப்பந்து வீரராக மோகித்சர்மா அல்லது வருண் ஆரோனை தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்வுக் குழு ஏற்கவில்லையாம். விஜய் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடி வருவதை சுட்டிக் காட்டி அவரைச் சேர்க்க்க கோரினாராம் டோணி. ஆனால் அதை தேர்வுக் குழு ஏற்கவில்லையாம்.
நிராகரிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications