For Daily Alerts
Just In
உ.பி. பலாத்காரங்களை எதிர்த்து கேரளாவில் ஒரு துணியை போர்த்திக் கொண்டு 6 பெண்கள் போராட்டம்
கொச்சி: உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை கண்டித்து கேரள உயர் நீதிமன்றம் முன்பு பெண்கள் அரை குறை ஆடையில் போராட்டம் நடத்தினர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து போராட்டம் நடத்த கேரளாவைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று முடிவு செய்தது.
இதையடுத்து அந்ச அமைப்பைச் சேர்ந்த 6 பெண்கள் கேரள உயர் நீதிமன்றத்திற்கு முன்பு உடலில் ஒரு துணியை மட்டும் போர்த்திக் கொண்டு போராட்டம் நடத்தினர். தங்களின் போராட்டத்தை பிறர் கவனிக்கவே அவர்கள் அவ்வாறு செய்தனர்.
பொது இடத்தில் ஆபாசமாக போராட்டம் நடத்தியதற்காக அந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
Comments
English summary
In an effort to draw attention to the recent rape cases in UP, six women activists here staged a protest in front of the Kerala High Court with just sheets wrapped around them.