திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்... ரூ.1.5 கோடி மதிப்பு!
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
திருப்பதி: ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மீண்டும் செம்மரக்கடத்தல் பிரச்சனை ஆந்திராவில் தலை தூக்கியுள்ளது. இந்த செம்மரக்கட்டை பிரச்சனையால், ஆந்திர போலீஸ் ஏற்கனவே தமிழர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் நடந்துள்ளது.
திருப்பதியின் பூபால்காலனியில் செம்மரக் கடத்தல் நடப்பதாக செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசிற்கு தகவல் வந்துள்ளது. இதனால் செய்யப்பட்ட தேடுதல் வேட்டையில் நிறைய மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 140 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு வந்த காவல்துறையினரை கண்டதும் 100க்கும் மேற்பட்டோர் தப்பியோடி இருக்கிறார்கள். இதன் மதிப்பு மொத்தம் ரூ.1.5 கோடி என்று கூறப்படுகிறது.