அம்மா சோனியா, தங்கை பிரியங்கா சூழ ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!
ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி லோக்சபா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி ஏற்கனவே போட்டியிட்ட நிலையில் 2-வது முறையாக இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது. இது கடுமையான விமர்சனங்களையும் உருவாக்கியது.

இந்த நிலையில் வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாளான இன்று ரேபரேலியில் ராகுல் காந்தியும் அமேதியில் கேஎல் ஷர்மாவும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது. அமேதியில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ரேபரேலியில் சோனியா காந்தி 2019-ல் வென்றிருந்தார். தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இதனால் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் இன்று ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். தாய் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கலின் போது உடனிருந்தனர்.
ரேபரேலியில் பாஜகவின் வேட்பாளராக தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த தினேஷ் பிரதாப் சிங், சோனியாவும் பிரியங்காவும் ரேபரேலி தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர். சோனியா காந்தி எம்பியாக இருந்த போது பிரியங்கா காந்திதான் ரேபரேலியில் அதிகாரம் செலுத்தினார். பின்னர்தான் கேஎல் ஷர்மாவிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் சோனியாவோ பிரியங்கா காந்தியோ ரேபரேலி தொகுதி மக்களை ஒருபோதும் சந்திக்கவே இல்லை என்றார்
இதேபோல முன்னாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் கூறுகையில், அமேதியை விட்டு ராகுல் ரேபரேலிக்கு ஓடியதே தோல்வி பயம் காரணமாகத்தான். அமேதியில் பாஜக தொண்டர்களின் தேர்தல் பணியைப் பார்த்து காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர் என்றார்.
-
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications