"சிகப்பு ரோஜாக்கள்.." 6 பெண்கள்.. கொடூரத்தின் உச்சம்! அதிர வைத்த ஆந்திர சைக்கோ! இப்படியும் நடக்குமா?
விசாகப்பட்டினம்: சிகப்பு ரோஜாக்கள் படம் பாணியில் பெண்களை குறி வைத்து குரூரமாக தனது சைக்கோத் தனத்தை தீர்த்துக் கொண்டுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஆண்.
Recommended Video
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (45). ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்த ராம் பாபுவுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. குழந்தை இல்லாத விரக்தியில் ராம் பாபு மதுவுக்கு அடிமையானார்.
தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை போடுவதை ராம்பாபு வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது.

மனைவி மீது குற்றச்சாட்டு
ஒருகட்டத்தில், மனைவியை சந்தேகப்பட தொடங்கினார் ராம்பாபு. அக்கம்பக்கத்தில் உள்ள ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவியை அவர் துன்புறுத்த ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் வீட்டின் உரிமையாளருடன் தனது மனைவிக்கு முறையற்ற தொடர்பு இருப்பதாக உறவினர்களிடம் கூறிய ராம்பாபு, இனி அவருடன் தன்னால் வாழ முடியாது எனக் கூறினார். இதனால் 4 ஆண்டுகளுக்கு முன்பு ராம்பாபுவின் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

நிதி மோசடி
இதுபோன்ற சூழலில், தான் பணிபுரியும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தனக்கு பல ஆண்டுகளாக கிடைக்க வேண்டிய கமிஷன் தொகையை தராமல் ஏமாற்றியதை ராம்பாபு சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடித்தார். இதுகுறித்து தனது முதலாளிகளிடம் கேட்ட போது அவரை அவர்கள் பணிநீக்கம் செய்தனர். இதனால் வேலையும் போனது.
மனைவியும் ஏமாற்றிவிட்டார்; வேலை செய்யும் இடத்திலும் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்று எண்ணி எண்ணி மனம் வெதும்பிய ராம்பாபு, ஒருகட்டத்தில் சைக்கோவாக மாறினார்.

சைக்கோவாக மாறினார்
மனைவி தன்னை ஏமாற்றியதால் அவருக்கு பெண்கள் மீது ஒருவித வெறுப்பும், கோபமும் உருவானது. இதையடுத்து பெண்களை கொலை செய்ய அவர் முடிவு செய்தார். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக விசாகப்பட்டினத்தில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை கொலை செய்தார் ராம்பாபு. கொலை செய்ததுடன் நிற்காமல் அந்தப் பெண்களின் சடலங்களுடன் உல்லாசமாகவும் ராம்பாபு இருந்துள்ளார். இதுபோல 6 பெண்களை அவர் கொலை செய்திருக்கிறார்.

6 பெண்கள்
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இந்த தொடர் கொலைகள் குறித்து போலீஸார் துப்புத் துலக்கி வந்தனர். ஆனால் கொலையாளி குறித்து எந்த தடயமும் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்த சூழலில்தான், கடந்த மாதம் தான் கொலை செய்த பெண்ணின் வீட்டை நோட்டம் பார்ப்பதற்காக ராம்பாபு நேற்று சென்றிருக்கிறார். அப்போது அங்கு மஃப்டியில் இருந்த போலீஸாருக்கு அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிடித்து விசாரித்த போது, பெண்களை கொலை செய்து வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் ராம்பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்களை தொடர்ச்சியாக கொலை செய்து வந்த சைக்கோ கொலையாளி பிடிபட்டது ஆந்திர மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications