பொது இடங்களில் முகத்தை மூடக்கூடாது... ஆக்ரா இளைஞர்களுக்கு போலீஸ் உத்தரவு
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள 18 வயது முதல் 30 வயது வரையிலான ஆண்கள், பொது இடங்களில் முகத்தை மூட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள 18 வயது முதல் 30 வயது வரையிலான ஆண்கள், பொது இடங்களில் முகத்தை மூட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில், பெண்கள் பொது இடங்களில் நடந்து செல்லும்போதும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும் துணியைக் கொண்டு முகத்தை மூடியபடி செல்கின்றனர்.

இது பள்ளி மற்றும் கல்லூரி இளம்பெண்கள் மத்தியில் வழக்கமாகவே இருக்கிறது. சாலைகளில் பெருகியுள்ள தூசு பிரச்னை மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதுபோல் செய்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இதே பாணியை தற்போது ஆண்களும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் பெருகிவிட்டுட்ட மாசுபாட்டால் ஆண்களும் முகத்தை மூடியபடி செல்கிறார்கள். குறிப்பாக, உ.பி., மாநிலம் ஆக்ரா, மதுரா உள்ளிட்ட நகரங்களில் இந்த போக்கு அதிகமாக காணப்படுகிறது.
இதுகுறித்து ஆக்ரா டிவிஷனல் கமிஷனர் ராம்மோகன் ராவ் கூறுகையில், " மதுரா அருகே முகமூடி கொள்ளையர்கள் நகைக் கடையை கொள்ளையடித்ததுடன், இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்தனர். இது அங்கே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல், பிரோசாபாத் அருகே தொழில் அதிபர் ஒருவரை சிலர் கடத்தி சென்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடிக்கொள்கிறார்கள். இதனால் குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் போலீசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில், 18 வயது முதல், 30 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தங்கள் முகத்தை மூடியபடி பொது இடங்களில் நடமாட கூடாது. மேலும், சாலையில் நடந்து செல்லும் போது ஹெல்மட் அணிந்தபடி செல்ல கூடாது." என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications