Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரிதாவின் அழகில் கவிழ்ந்த ராய்.. கடைசியில பார்த்தால்.. அதுக்குன்னு இப்படியா? விக்கித்து உறைந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: உயிருக்குயிராக காதலித்து வந்திருக்கிறார்கள் இந்த காதலர்கள்.. ஆனால், காதலன் மட்டும் இப்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஷ்யாம் ராய்... 35 வயதாகிறது.. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.. அவரது பெயர் சரிதா..

Serious Condition and Do you know why did girlfriend take this sudden decision in Jharkhand

சரிதா: சரிதாவுக்கு 32 வயதாகிறது. கடந்த ஒரு வருட காலமாகவே தீவிரமாக இருவரும் உருகி உருகி காதலித்து வந்தனர்.. நெருங்கியும் பழகிவந்தனர்.. அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று ஜாலியாகவும் இருந்தனர்..

ஒருகட்டத்தில், சரிதாவிடமிருந்து மெல்ல விலகல் போக்கை கையாண்டார் ராய்.. ஆனால், சரிதாவோ, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி, ராயிடம் கூறினார்.. ஆனால் எப்போது கல்யாண பேச்சை எடுத்தாலும், அதற்கு பிடிகொடுக்காமல் ராய் தவிர்த்து விடுவாராம்.. இதனால் கடுப்பான சரிதா, சம்பவத்தன்று மீண்டும் ராயை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

கல்யாணம்: தன்னை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா? முடியாதா? இரண்டில் ஒரு பதிலை சொல்லியே ஆக வேண்டும் என்று கறாராக கேட்டார்.. இதற்கு மேல் சரிதாவிடம் தப்பிக்க முடியாது என்று முடிவு செய்த ராய், தன்னால் திருமணம் செய்ய முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.. இதைக்கேட்டதும் ஆத்திரமடைந்த சரிதா, கையில் தயாராக எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து, ராயின் மர்ம உறுப்பை வெட்டி விட்டார்..

இதனால் வலியால் அலறி துடித்த ராய், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ராயை மீட்டு தன்பாத்தில் உள்ள ஷாஹித் நிர்மல் மஹ்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. டாக்டர்கள் போராடி ராயின் உடலை மீட்டுள்ளனர்..

மருத்துவமனை: ஆனாலும், அவர் இன்னும் சீரியஸாகவே இருக்கிறாராம்.. இதற்குபிறகு, விஷயத்தை கேள்விப்பட்டதுமே, போலீசார் மருத்துவமனைக்கு சென்று நடந்தது குறித்து ராயிடம் விசாரித்துள்ளனர்..

அப்போது சரிதா மீது ராய் புகார் தந்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த விஷயம் தெரிந்ததுமே, சரிதாவும் ஸ்டேஷனுக்கு சென்று, தன்னிடம் நெருங்கி பழகி ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2 பேரும் புகார்களை தந்திருப்பதால், 2 பேர் மீதுமே போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

நெருங்கிய உறவு: இதுதொடர்பாக போலீஸார் சொல்லும்போது, ராய்க்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனாலும், சரிதாவை காதலித்து வந்திருக்கிறார்.. கல்யாணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்து, சரிதாவுடன் நெருங்கிய உறவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சரிதா வலியுறுத்தியிருக்கிறர்.. ஆனால், அவரை கல்யாணம் செய்ய கன்ஷ்யாம் மறுத்ததால் அந்த ஆத்திரத்தில் சரிதா இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்... அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

நிலைமை சீரியஸ்: காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி வெட்டிய சம்பவம், ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ராய் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+