சிந்துரத்தினா போர்க்கப்பல் விபத்து... 7 அதிகாரிகளே காரணம் என கண்டுபிடிப்பு.. விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: ஐஎன்எஸ் சிந்துரத்தினா போர்க்கப்பலில் ஏற்பட்ட தீவிபத்துக்குக் காரணம் 7 அதிகாரிகளே என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனோகர் பாரிக்கர் ராஜ்யசபாவில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், ஐஎன்எஸ் சிந்துரத்தினா போர்க்கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்ட குழு, இந்த விபத்துக்கு 7 அதிகாரிகளே காரணம் என்று கண்டறிந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஏழு அதிகாரிகளும் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொண்டதால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு பிராந்திய கடற்படை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணைக் குழுவின் விசாரணை இன்னும் முழுமை பெறவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றார் அவர்.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஎன்எஸ் சிந்துரக்ஷ்க் என்ற போர்க்கப்பலில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது இதில் கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்த 18 பேர் உயிரிழந்தனர். அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி ஐஎன்எஸ் சிந்துரத்தினா கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கப்பலின் மேலே ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்!












Click it and Unblock the Notifications