அஸ்ஸாமில் பயங்கரம்... ராணுவ உடையில் வந்து தீவிரவாதிகள் தாக்கியதில் 7 பேர் பலி
கோல்பாரா, அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் துப்பாக்கித் தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் சிலர் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராணுவ உடையில் தீவிரவாதிகள் கூட்டமாக வந்தனர். வந்தவர்கள், அங்கு பண்டிகையைக் கொண்டாடிக் கொ்ண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் ஏழு பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். பின்னர் தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். இந்தப் பகுதி, மேகாலயா மாநிலத்திற்கு மிக அருகில் உள்ளது.
இந்தப் பகுதியில் ஏற்கனவே ரபாஸ் மற்றும் ராபோஸ் என்ற இரு பழங்குடியினப் பிரிவினருக்கிடையே முன்விரோதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மேகாலயாவைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவினர் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட அனைவருமே ராபோஸ் பழங்குடியினர் என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையே பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications