நடிகைகள், மாடல்களை வைத்து விபச்சாரம் செய்தவர் கைது: கான்டாக்ட் லிஸ்ட்டில் அரசியல்வாதிகள்
பனாஜி: கோவாவில் பெரும்புள்ளிகளுக்கு பெண்களை சப்ளை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து நடிகைகள், மாடல்களின் விபரங்கள் கிடைத்துள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் நடிகைகள், மாடல்களை வைத்து பெரிய அளவில் விபச்சாரம் செய்து வந்த ஆனந்த் குமார் என்பவரை கோவா தலைநகர் பனாஜியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து எஸ்.பி. கஷ்யப் கூறுகையில்,
பெரும் புள்ளிகளுக்கு மாடல்கள், நடிகைகளை சப்ளை செய்து வந்த நபரை கைது செய்துள்ளோம். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன என்றார்.
மேலும் ஆனந்த் போன்று பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பனாஜியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனந்த் வீட்டில் இருந்து கிடைத்த தொடர்பு எண்களில் பெரிய நடிகைகள், அரசியல்வாதிகளின் பெயர்களும் அடக்கம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications