Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் தொழிலாளியை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்.. கொடுத்த ரூ.2500 பணத்தையும் பறித்தது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: விபச்சாரம் செய்யும் இளம் பெண் ஒருவருடன் இரவு முழுக்க மாறிமாறி உல்லாசம் அனுபவித்துவிட்டு அந்த பெண்ணிடமிருந்து ரூ.2500 பணத்தையும் பறித்துச் சென்ற ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் தாவணகெரேயை சேர்ந்தவர் மாலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 24 வயதாகும் மாலாவுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. திருமணமான ஓராண்டிலேயே கணவன், குடும்பத்தைவிட்டு எங்கோ ஓடிவிட்டார்.

விபச்சாரம்

விபச்சாரம்

இதனால், குழந்தையுடன் பெங்களூர் வந்த மாலா, வீட்டு வேலைகள் செய்து வருமானம் ஈட்டி வந்தார். ஆனால் அதில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. எனவே, விபச்சாரம் செய்து காசு சேர்க்க ஆசைப்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக விபச்சாரத்தில் இறங்கினார்.

ரேட் ஃபிக்ஸ்

ரேட் ஃபிக்ஸ்

சில தினங்கள் முன்பு, புரோக்கர் ஒருவர், பார்ட்டி அழைப்பதாக கூறி, மாலாவை, பெங்களூர் நகரிலுள்ள கெங்கேரி பகுதிக்கு இரவு நேரத்தில், போகுமாறு கூறியுள்ளார். மாலா அங்கு சென்றபோது, காரில் இருவர் இருந்துள்ளனர். ரூ.2500 என பேரம் படிந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மாலாவை காருக்குள் கூட்டி வைத்துக்கொண்டு கிளம்பினர்.

மலையில் பார்ட்டி

மலையில் பார்ட்டி

அங்கிருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலுள்ள முலஹள்ளி மலைப் பகுதிக்கு கார் விரைந்தது. அங்கு மேலும் 4 நண்பர்கள் அவர்களோடு சேர்ந்துகொண்டனர். அங்கு வைத்து குடி, கும்மாளமாக பார்ட்டி நடந்துள்ளது. மாலாவுக்கும் மது ஊற்றி குடிக்க வற்புறுத்தியுள்ளனர். மாலா குடித்ததும், பாதி மயக்கமடையும் நிலைக்கு சென்றார்.

கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

இதையடுத்து ஆறு பேரும், விடியவிடிய மாறி மாறி, மாலாவுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். விடியற்காலம் 3 4 மணியளவில், மாலாவை காரில் ஏற்றிச்சென்ற இருவரும் அதே காரில் அவரை பெங்களூர் நோக்கி கூட்டி வந்தனர். ஆனால் சாத்தனூர் அருகே கார் வந்தபோது, திடீரென, மாலாவை கீழே இறக்கிவிட்டு காரில் வந்தவர்கள் பறந்துவிட்டனர். முன்னதாக, அவரை அடித்து, அவரிடமிருந்த ரூ.2500 பணத்தை பிடுங்கி கொண்டனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

போதை மற்றும் வலி மயக்கத்தில் சாலையோரம் கிடந்த மாலாவை ஆட்டோ ஓட்டுநர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கூட்டு பலாத்காரமும், பணப்பறிப்பும் நடந்துள்ளது தெரியவந்தது. பலாத்காரம் நடந்ததாக கூறப்பட்ட இடத்துக்கு போலீசார் சென்றபோது, அங்கு மது பாட்டில், சிகரெட் அட்டை பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. அதை ஆதாரத்திற்காக போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+