அர்மார்... இந்தியாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் 26 வயது இணைப்புப் பாலம்!
டெல்லி: 26 வயதுதான் ஆகிறது ஷபி அர்மார் என்ற இந்த இளைஞருக்கு. ஆனால் இந்த வயதில் இந்த இளைஞர் செய்துள்ள "சாதனை" நடுநடுங்க வைக்கிறது. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆளெடுக்கும் நபர்களுக்கும், அந்த அமைப்புக்கும் இடையேய முக்கிய இணைப்புப் பாலமாக விளங்கி வருகிறாராம் அர்மார்.
இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நபர் என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள். இவர் குறித்து இன்டர்போல் போலீஸ் பிறப்பித்த உத்தரவில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது, நிதி சேகரித்தது, ஆட்களைத் திரட்டிது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர் அர்மார். இவரது பெயர் முகம்மது ஷபி. அர்மார் என்பது குடும்பப் பெயராகும். ஆங்கிலம், அட்டகாசமாக பேசுவார். அது போக கன்னடம், உருது, இந்தி ஆகியவையும் நன்றாகத் தெரியும். இவரது புனை பெயர் யூசுப் அல் ஹிந்தி. இவர் அன்சர் உல் தவாஹித் என்ற அமைப்பின் நிறுவனரான சுல்தான் அர்மாரின் சகோதர் ஆவார். இந்த அமைப்புதான் ஐஎஸ்ஐஎஸ் மைப்புக்கு ஆட்களைத் திரட்டி அனுப்பும் அமைப்பாகும்.
தனது சகோதரரின் நிழலில்தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார் ஷபி. தனது சகோதரருடன் சேர்ந்துதான் அவர் ஆட்களைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். சமீபத்தில்தான் அதிலிருந்து வெளியே வந்துள்ளார். காரணம், இவரது சகதோரர் சுல்தான் சிரியாவில் நடந்த சம்டையின்போது கொல்லப்பட்டு விட்டார். இதனால் ஷபி வசம் அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தன.
இந்தியா முழுவதும் ஐஎஸ் ஆமைப்புக்கு ஆட்களைத் திரட்டும் பணிக்காக பல்வேரு கிளைகளை உருவாக்கியவர் ஷபி. சமீபத்தில் இப்படிப்பட்ட ஆளெடுப்பு மையம் ஒன்றைக் கண்டுபிடித்தது உளவுப் பிரிவு. அதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மும்பையைச் சேர்ந்த முடாபிர் ஷேக் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் அர்மார் பேசிய பேச்சையும் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளெடுப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அர்மார்.
இதன் மூலம் ஆளெடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் மிகப் பெரிய அளவில், வலுவான அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ்ஸை உருவாக்குவதே இவர்களின் முக்கியப் பணியாக, நோக்கமாக இருந்துள்ளது.
மேலும் தனது சகோதரர் உருவாக்கிய அன்சர் உல் தவாஹித் அமைப்பின் பெயரையும் கூட ஜுநுத் அல் கலீபா இ ஹிந்த் என்றும் மாற்றியுள்ளார் அர்மார். இதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் காட்டமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என்பது அவரது எண்ணம்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு தவணைளாக ரூ. 6 லட்சம் வரை ஆளெடுக்கும் பணிக்காக செலவிட்டுள்ளாராம் அர்மார்.












Click it and Unblock the Notifications