அதிர வைக்கும் அல் கொய்தாவின் ”ஷாஹீன் போர்ஸ்” பெண்கள் படை!
பெங்களூர்: அதிர வைக்கும் ஒரு பெண்கள் படையை இந்தியத் துணைக் கண்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது அல் கொய்தா அமைப்பு. ஷாஹீன் போர்ஸ் என்று இதற்குப் பெயர் சூட்டியுள்ளது அல் கொய்தா.
முன்பு போல இல்லாமல் இப்போதெல்லாம் தற்கொலைப் படையை உருவாக்க பெண்களை அதிக அளவில் அனைத்துத் தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் பெண் தற்கொலைப் படையினரை வைத்துள்ளது. அந்த அமைப்பு தனது மனித வெடிகுண்டான சஜிதா அல் ரிஷ்வியை மீட்க கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தை உள்ளடக்கிய தனது துணைக் கண்டப் பிரிவுக்கு பெண் தற்கொலைப் படையை அல் கொய்தா உருவாக்கி வருகிறதாம்.

இந்த நாடுகளிலிருந்து பெண்களை தற்கொலைப் படையில் சேர்க்க அது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆட்களையும் திரட்டி வருகிறதாம்.
இந்திய துணைக் கண்டத்திற்கான தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆசிம் உமர் என்பவர், அல் கொய்தா ஷாஹீன் படையை அறிவதித்துள்ளார். இதன் தலைவராக அபின்டா ஆயிஷா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அல் கொய்தா பிரிவின் சர்வதேச தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளை ஜிஹாத்தை விரும்பச் சொல்லுங்கள்:
இதுதொடர்பாக அது பல துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில் உங்களது குழந்தைகளை ஜிஹாத்தை விரும்பும் வகையில் வளருங்கள். ஜிஹாத்துக்காக அனைத்து இஸ்லாமியப் பெண்களும் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். கடவுளின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் துண்டுப் பிரசுரங்கள் முதலில் ஆப்கானிஸ்தானில்தான் காணப்பட்டன. தற்போது பாகிஸ்தானிலும் இது விநியோகிக்கப்படுகிறது. இதற்கு ஆதரவு கிடைத்துள்ளதா என்பது தெரியவில்லை என்று இந்திய உளவு அமைப்புக்ள் கூறுகின்றன. ஆனால் பெண்களை அதிகஅளவில் சேர்க்க தீவிரவாத அமைப்புகள் முயல்வது மட்டும் உறுதியாகியுள்ளது.
எண்ணிக்கை கூடுகிறது:
மோசமான தலிபான்கள் என்று அமெரிக்காவாலும், பாகிஸ்தானாலும் வர்ணிக்கப்படும் தெஹரிக் இ தலிபான் அமைப்பில் 500 பெண்கள், தற்கொலைப் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று வருவது தெரிய வந்துள்ளது. முற்றிலும் பெண்கள் கொண்ட ஒரு பிரிவை இந்த தீவிரவாத அமைப்பு உருவாக்கி வருகிறது. மேலும் பல பெண்களையும் இது இணைத்து வருகிறது.
சமீபத்தில் ஐஎஸ் அமைப்பும் கூட முற்றிலும் பெண்களைக் கொண்ட ஒரு பிரிவை உருவாக்க முடிவு செய்தது. இந்த பிரிவுக்கு சஜிதாவை தலைவராக்கவும் அது தீர்மானித்துள்ளது. இதற்காகவே சஜிதாவை மீட்க அது முயன்று வருகிறது. சஜிதா தற்போது ஜோர்டான் நாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளார். சஜிதாவும் அவரது கணவரும் தற்கொலைப் படையாக மாறி, ஜோர்டான் நாட்டில் ஒரு ஹோட்டலில் குண்டு வீசினர். இதில் சஜிதாவின் கணவர் உயிரிழந்தார். ஆனால் சஜிதாவின் இடுப்பில் கட்டியிருந்த குண்டு வெடிக்காமல் போனதால் அவர் பலியாகவில்லை குண்டும் வெடிக்கவில்லை, சிக்கிக் கொண்டார்.
ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு பக்கீர் அல் பக்தாதிக்கு மிகவும் நெருக்கமானவரான அபு முசாப் சர்காவியின் சகோதரிதான் இந்த சஜிதா.
லஷ்கர் இ தொய்பா அமைப்பும் கூட பெண்கள் அமைப்பை உருவாகிகுயள்ளது. அதன் பெயர் டுக்தரீன் இ தொய்பா என்பதாகும். தார் இ சோபா என்ற இன்னொரு பிரிவையும் அது வைத்துள்ளது. வங்கதேசத்தின் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பும் கூட ஒரு பெண்கள் பிரிவை வைத்துள்ளது. புர்த்வான் சம்பவத்தின்போது இது தெரிய வந்தது.
ஏன் பெண்களைச் சேர்க்கிறார்கள்?
பெண் தற்கொலைப் படையினர்தான் துல்லியமாக தாக்குதலை நடத்துகிறார்கள். 10 தாக்குதல்களில் 8 வெற்றிகரமாக முடிவதாக கணக்கு ஒன்று கூறுகிறது. காரணம், பாதுகாப்பு்ப் படையினரின் சோதனையிலிருந்து பெண்களால் எளிதில் தப்பி விட முயல்வதால். மேலும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அமைதியாக, நிதானமாக செயல்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு கற்றுக் கொள்ளும் திறனும் அதிகமாக உள்ளது.
தாக்குதலின்போது கணவர், பிள்ளைகள், குடும்பத்தினரை இழந்த பெண்கள்தான் குறி வைத்து தீவிரவாதிகளால் தேர்வு செய்யயப்படுகிறார்கள். பழிவாங்கும் உணர்வை அவர்களுக்குள் விதைத்து இழுக்குிறார்கள்.
மேலும் பல இடங்களில் தங்களது பிள்ளைகளை தீவிரவாத அமைப்பில் சேர்க்குமாறு அறிவுரை கூறுமாறும் பெண்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறதாம். இது பல நேரங்களில் வெற்றியைத் தருவதாகவும் உளவுத்துறை கூறுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications