கோபிநாத் முண்டே மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: பிரதமர் மோடிக்கு சரத்பவார் கடிதம்
டெல்லி: மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வந்த கோபிநாத் முண்டே, கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் சதியால் இந்த விபத்து நடந்துள்ளதா என்ற கேள்வி வலுத்து வருகிறது.
கோபிநாத் முண்டே மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர பத்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய குடியரசு கட்சித்தலைவர் அத்வாலே உள்ளிட்ட தலைவர்கள் கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கைக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர பத்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் சி.பி.ஐ. விசாரணை கேட்டுள்ளனர். இதை பரிசீலித்து, அரசு ஏற்க வேண்டும் என்பதுதான் என் கருத்தும் ஆகும். அதுதான் உண்மைகளை வெளியே கொண்டு வரும் என்று கூறியுள்ளார்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications