சுனந்தா கொலை வழக்கு: 48 மணிநேரத்திற்குள் தரூரிடம் போலீஸ் விசாரணை
டெல்லி: சுனந்தா கொலை வழக்கு பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் 48 மணிநேரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக அண்மையில் டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்தார். இதையடுத்து சுனந்தாவின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர் இன்று மாலை டெல்லிக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கமிஷனர் பஸ்ஸி கூறுகையில்,
தரூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவரிடம் விரைவில் விசாரணை நடத்துவோம். நாளை அல்லது நாளை மறுநாள் அவரிடம் விசாரிக்கப்படும். இந்த வழக்கு பற்றி தெரிந்தவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
சுனந்தாவை கொலை செய்தது யார் என தரூருக்கு தெரியும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications