Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுனந்தா கொலை வழக்கு: 48 மணிநேரத்திற்குள் தரூரிடம் போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுனந்தா கொலை வழக்கு பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் 48 மணிநேரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக அண்மையில் டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்தார். இதையடுத்து சுனந்தாவின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Shashi Tharoor likely to be quizzed within the next 48 hours: Delhi police commissioner

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர் இன்று மாலை டெல்லிக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கமிஷனர் பஸ்ஸி கூறுகையில்,

தரூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவரிடம் விரைவில் விசாரணை நடத்துவோம். நாளை அல்லது நாளை மறுநாள் அவரிடம் விசாரிக்கப்படும். இந்த வழக்கு பற்றி தெரிந்தவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

சுனந்தாவை கொலை செய்தது யார் என தரூருக்கு தெரியும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+