ஜெ.வுக்கு எதிராக ஷீலா பாலகிருஷ்ணன் சாட்சியம்: அம்பலப்படுத்திய குன்ஹா- அதிருப்தியில் அதிமுக!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.
அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சிகளை அளித்துள்ளனர். அதில் தலைமைச் செயலாளராக பணியாற்றி, தற்போது தமிழக அரசின் ஆலோசகராகவும் உள்ள ஷீலா பாலகிருஷ்ணனும் முக்கிய சாட்சியம் அளித்திருந்தார்.
அவரது சாட்சி நீதிபதி அளித்த தீர்ப்பில் 801 பக்கத்தில் 94.5 வது பத்தியில் வெளியாகியுள்ளது. இது குறித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பு வருமாறு:
இந்த வழக்கில், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அளித்துள்ள சாட்சியத்தில் கூறியதாவது: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் முக்கிய சொத்தாக உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற கம்பெனி காந்தி என்பவரின் குடும்பத்தினருக்கு சொந்த மானது. காந்தி, அசோகன், சக்திவேலு ஆகியோர் அந்த மில்லின் இயக்குநர் குழுவில் இருந்தனர்.
இந்த மில்லுக்கு ரூ.5 மதிப்புள்ள 6,10,000 பங்குகள் இருந்தன. இந்த மில்லில் இருந்து போதிய வருமானம் இல்லை என்பதால் அதை விற்பனை செய்ய முடிவு செய்தார்களாம்.
இந்த விஷயம் வெளியில் தெரிந்தவுடன் ராமசாமி உடையார் என்பவர் சுதாகரனை காந்தியிடம் அழைத்து வந்துள்ளார். பேச்சுவார்த்தை முடிவில் 5 ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ரூ.3 மதிப்பு என்ற அடிப்படையில் கைமாற்றப்பட்டது.
சுதாகரன், சுந்தரவதனன், இளவரசி ஆகியோர் அந்த மில்லின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றனர். இதையடுத்து, தாங்கள் இயக்குநர் குழுவிலிருந்து விலக்கிக் கொள்வதாக காந்தி, அசோகன், சத்திவேலு ஆகியோர் சிப்காட் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அப்போது, சிப்காட் நிறுவனம் ஷீலா பாலகிருஷ்ணன் வசம் இருந்தது. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் தொடர்பான விசாரணையின்போது ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகி தனது சாட்சியத்தில் இந்த கம்பெனியின் நிர்வாகம் மாற்றம் தொடர்பாக தெளிவாக கூறியுள்ளார்.
இவ்வாறு குன்ஹா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications