இந்திராணி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததையடுத்து மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள இந்திராணி இன்று மதியம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Indrani Mukerjea

இது குறித்து மருத்துவமனை டீன் டி.பி. லஹானே கூறுகையில்,

இந்திராணியை மதியம் 2 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவர் சுயநினைவை இழந்திருந்தார். அவர் சில மாத்திரைகளை விழுங்கியதாக நினைக்கிறோம். அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது நிலைமை மோசமாக உள்ளது. இன்னும் 24 மணிநேரம் கழித்து தான் எதையும் கூற முடியும் என்றார்.

இந்திராணியின் உடல்நலம் சரியில்லாத தாய் துர்கா ராணி(83) நேற்று கவுஹாத்தியில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+