கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால்தான் இறந்தார் ஷீனா - மருத்துவ அறிக்கை
மும்பை: இந்திராணி முகர்ஜியின் மகளான ஷீனா போரா கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் தான் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த இந்திராணி தான் பெற்றெடுத்த மகள் ஷீனா போராவை கடந்த 2012 ஆம் ஆண்டு காருக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்பட்டது. பின்னர் ஷீனா போராவின் உடலை ராய்காட் அருகே உள்ள காட்டில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் 3 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

இச்சம்பவத்தில் இந்திராணி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திடீர் திருப்பமாக பீட்டர் முகர்ஜியும் கைதாகி சி.பி.ஐ காவலில் இருக்கிறார்.
இதனிடையே ராய்காட்டில் மீட்கப்பட்ட ஷீனா போராவின் எலும்புகள் மருத்துவ பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் 5 டாக்டர்களை கொண்ட சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.
அக்குழு முழுமையான ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஷீனா போராவின் கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தான் அவர் உயிரிழந்தார்'' என்பது தெளிவாகி உள்ளது. மேலும், கொலை வழக்கின் முக்கிய ஆதாரத்தை மறைக்கும் பொருட்டு, முழு உடலையும் அழிக்க கொலையாளிகள் முற்பட்டு இருக்கின்றனர் என்றும், எலும்புகளில் பதிவாகி உள்ள காயத்தின் அளவு மிகப்பெரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications