மும்பை வருகிறார் ஷீனாவின் தம்பி.. இவராவது உண்மைகளைச் சொல்வாரா?
மும்பை: ஷீனா போராவின் தம்பியான மிக்கயில் போரா மும்பைக்கு வருகிறார். அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவுள்ளார். அவர் ஷீனா - இந்திராணி விவகாரம் குறித்து பல புதிய பரபரப்புத் தகவல்களை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மிக்கயில், போலீஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவுள்ளார். குவஹாத்தியில் இந்திராணியின் பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார் மிக்கயில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ஷீனா கொலை விவகாரத்தில் நடந்ததே வேறு. கொலைக்கான காரணமும் வேறு. அந்தக் காரணத்தை எனது தாயாரே போலீஸாரிடம் சொல்லி விட வேண்டும். இல்லாவிட்டால் நான் சொல்வேன் என்று மிக்கயில் கூறியுள்ளார் என்பதால், இன்று அவர் போலீஸாரிடம் அளிக்கப் போகும் வாக்குமூலத்தில் உண்மைகள் பல வெளிப்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக குவஹாத்தியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஷீனாவை மட்டுமல்ல, என்னையும் கூட கொல்ல அவர்கள் துணிவார்கள். எனது சகோதரி கொல்லப்பட்டதற்கான காரணத்தை நான் போலீஸாரிடம் சொல்வேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
ஏற்கனவே மும்பை போலீஸ் குழு ஒன்று குவஹாத்தி வந்து மிக்கயிலை சந்தித்துப் பேசியுள்ளது. முதல் கட்ட விசாரணையும் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications