பாஜகவுக்கு சரத் பவார் ஆதரவளிப்பது சந்தர்ப்பவாதம்: சிவசேனா கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பது என்பது பச்சை சந்தர்ப்பவாதம் என்று சிவசேனா கட்சி மிகக் கடுமையாக தாக்கியுள்ளது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 123 இடங்களைப் பெற்று தனிக்கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 22 எம்.எ.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

Shiv Sena hits out at NCP, calls it opportunist for extending support to BJP in Maharashtra

இந்த நிலையில் 41 தொகுதிகளைக் கைப்பற்றிய தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தர தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால் இதை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை.

பாஜகவும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். விருப்பம். இந்த நிலையில் பாஜகவின் நாளேடான சாம்னாவில், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்திருப்பது சந்தர்ப்பவாதம் என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+