மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசுடன் மோதல்: தடையை மீறி இறைச்சி விற்பனையில் இறங்கிய சிவசேனா!!
மும்பை: மகாராஷ்டிரா அரசு விதித்த தடையை மீறி இறைச்சி விற்பனையில் சிவசேனா மற்றும் ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவினர் மும்முரமாக ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயின் சமூகத்தினரின் உண்ணா நோன்பு பண்டிகைக்காக 4 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு மும்பை உள்ளிட்ட மாநகராட்சிகள் தடை விதித்துள்ளன. ஆனால் இந்த தடைக்கும் ஆளும் பாரதிய ஜனதா அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவும் இறைச்சி தடைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அத்துடன் சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவினர் பல இடங்களில் திடீர் கடைகளைப் போட்டு கோழி இறைச்சி விற்பனை செய்யவும் தொடங்கினர். இந்த கடைகளை போலீசார் அகற்றி இரு கட்சியினரைச் சேர்ந்தோரை கைது செய்தனர்.
இந்த பாணியை பின்பற்றி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் ஆங்காங்கே திடீர் கோழி இறைச்சி கடைகளை திறந்து வைத்து களேபரப்படுத்த போலீசார் இவற்றை அப்புறப்படுத்தினர். இந்த தடையை மீறி இறைச்சி விற்பனை போராட்டங்களால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications