தேர்தல் முடிந்த பிறகு பலாத்கராம் செய்திருக்கலாமே: சரத் பவார் கட்சி தலைவரின் சர்ச்சை பேச்சு
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் சுதாகர் காதே எம்.எல்.ஏ.வாக ஆசைப்பட்டால் தேர்தல் முடிந்த பிறகு பலாத்காரம் செய்திருக்க வேண்டும் என்று கூறி தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் ஆர்.ஆர். பாட்டில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.ஆர். பாட்டில் சங்ளி மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா வேட்பாளர் சுதாகர் காதேவின் ஆதரவாளர்கள் என்னிடம் வந்து அவருக்கு ஆதரவு கோரினார்கள். நீங்கள் ஏன் ஆதரவு கோருகிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். காதேவுக்கு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் தேர்தலுக்கு பிறகு பலாத்காரம் செய்திருக்க வேண்டும் என்றார்.
பாட்டிலின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.