மும்பையில் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியான பெண்: திடுக்கிடும் வீடியோ
மும்பை: மும்பை போரிவாலி ரயில் நிலையத்தில் 55 பெண் ஒருவர் மீது ரயில் சக்கரம் ஏறி அவர் பலியாகியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போரிவாலி ரயில் நிலையத்திற்கு வந்த 55 வயது பெண் மற்றும் அவரது குடும்பம் வதோதரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளது. பிற்பகல் 3.50 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் 4 மணிக்கு எல்லாம் கிளம்பத் துவங்கியது.
ரயிலில் வர வேண்டிய அந்த பெண்ணின் குடும்பத்தாரில் சிலர் வரவில்லை. இதனால் ரயில் புறப்பட்டுக் கொண்டிருக்கையில் அந்த பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர், இளம்பெண் ஆகியோர் கீழே இறங்கினர்.
இளம் பெண்ணும், இளைஞரும் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிவிட்டனர். ஆனால் அந்த 55 வயது பெண் ரயிலில் இருந்து இறங்கும்போது தண்டவாளத்தில் விழுந்தார். அவர் மீது ரயில் சக்கரம் ஏறி பலியானார்.
55 வயது பெண் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.