பா.ஜ.க. ஊழல்களால் கொந்தளித்த மூத்த தலைவர் சாந்தகுமார்...'நிதானமாக' இருக்க மேலிடம் அட்வைஸ்
டெல்லி: பாரதிய ஜனதாவிலேயே ஊழலுக்கு எதிராக கலகக் குரல் வெடித்துள்ளது. ஊழல் புகார்களுக்கு உள்ளான நபர்கள் மீது பாரதிய ஜனதா கட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சாந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இதற்காக கட்சிக்குள் லோக்பால் அமைப்பை போல ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார். அதே நேரத்தில் பா.ஜ.க. மேலிடமோ நிதானத்தைக் கடைபிடிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தகுமார், பாரதிய ஜனதாவின் மிக மூத்த தலைவர். அவர் அண்மையில் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், கடந்த ஓராண்டாக நற்பெயருடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து வந்த நிலையில், அதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் திடீரென எழுந்தவை அல்ல.
அதன்பேரில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது அதற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்காணிக்க லோக்பால் அமைப்பைப் போல கட்சிக்குள் ஒழுக்க நெறிக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மக்கள், தங்களது கடைசி வாய்ப்பாக நம்பை நம்பியுள்ளனர். அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது என்று கூறியிருந்தார்.
ம.பி. வியாபம் முறைகேடு, லலித் மோடி விவகாரம், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், மகாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோருக்கு எதிரான ஊழல் புகார்கள் என மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுக்கும் நிலையில் சாந்தகுமாரின் கடிதம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் பாரதிய ஜனதா தலைமை பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகிவிட்டது.
Posted by Shanta Kumar on Sunday, July 19, 2015
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, சாந்தகுமாரின் கருத்துக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்புமே இல்லை. அவரை இதுவரை மூத்த தலைவராக கருதினோம்.. ஆனால் காங்கிரஸின் பொய் பிரசாரங்களை அவர் நம்பத் தொடங்கி தன்னிலையில் இருந்து விலகிவிட்டார்.. அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறினார்.
ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாவின் ஊழல்களை முன்வைத்து உண்டு இல்லை என்கிற பாணியில் எதிர்க்கட்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது சொந்த கட்சியிலேயே வெடித்திருக்கும் கலகக் குரல் பாரதிய ஜனதாவை கதிகலங்க வைத்துள்ளது என்பதே நிதர்சனம்.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications