நோட்டாவுக்கு கீழ் சென்ற காங்கிரஸ்.. ராகுல் காந்திக்கு விழுந்த இடி.. சிக்கிமில் நிலைமை ரொம்பவே மோசம்
காங்டாக்: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், நேற்று வெளியான சிக்கம் சட்டசபைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

முன்னதாக நேற்றைய தினம் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரு மாநிலங்களின் சட்டசபை நேற்றுடன் நிறைவடைவதால் அங்கு முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
அருணாச்சல பிரதேசம்: இதில் அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு 46 தொகுதிகளை பாஜக மொத்தமாகக் கைப்பற்றியது. அதேபோல சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் கட்சி ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது.
அதேநேரம் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவோம் என்றும் 290 சீட்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையில் இருந்த நிலையில், இந்த படுதோல்வி காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
எத்தனை தொகுதிகள்: அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட அருணாச்சல பிரதேசத்தில் 3 சீட்களில் வென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் வெறும் 5%ஆகச் சரிந்துள்ளது.
சிக்கிம்: ஆனால், இதை விட காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அதிர்ச்சி கொடுத்த மாநிலம் என்றால் அது சிக்கிம் தான். சிக்கம் மாநிலத்தில் மொத்தம் 32 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 31இல் ஆளும் கட்சியாக இருந்த எஸ்கேஎம் கட்சி க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பெற்றது. எஸ்டிஎப் என்ற மற்றொரு பிராந்திய கட்சி ஒரு சீட்டில் வென்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு தேசிய கட்சிகளாலும் ஒரு சீட்டில் கூட வெல்ல முடியவில்லை.
ஆனால், இதில் பெரிய ஷாக் காங்கிரஸ் கட்சிக்குத் தான். ஏனென்றால் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் சிக்கிமில் வெறும் 0.32% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது நோட்டாவை விடக் குறைவாகும். சிக்கிம் மாநிலத்தில் நோட்டாவுக்கு 0.99% வாக்குகள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அதை விடவும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.
நோட்டாவை விட குறைவு: குறிப்பாக காங்டாக் தொகுதியில் போட்டியிட்ட சம்மிட் டார்கோன் என்ற காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 44 வாக்குகளை மட்டுமே பெற்றார். மேலும் அரிதாங் தொகுதியில் போட்டியிட்ட சுமித்ரா ராய் வெறும் 46 வாக்குகளை மட்டுமே பெற்றார். இது அங்குப் பதிவான நோட்டா வாக்குகளை விடக் குறைவாகும். இப்படி மொத்தம் 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டாவுக்கு கீழ் சென்றுள்ளது.
லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருக்கிறது. குறிப்பாக 295 சீட்களில் வெல்வோம் என்று அக்கட்சியின் ராகுல் காந்தியும் நம்பிக்கையுடன் கூறி வரும் நிலையில், இது மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கிறது.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications