சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது எஸ்கேஎம்! 32 தொகுதிகளில் 31ஐ கைப்பற்றியது!
கேங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில், சிக்கிம்மை மீண்டும் எஸ்கேஎம் வெற்றி கொண்டு தக்க வைத்துக்கொண்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து, லோக்சபா தேர்தல் முடிவுறுகிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
லோக்சபா தேர்தலுக்கு இடையில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி சிக்கிம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் தேதி மாற்றப்பட்டு ஜூன் 2ம் தேி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் சிக்கிம் மாநில அரசின் பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால்தான் இன்று வாக்கை எண்ண திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் ஆளும் எஸ்கேஎம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவுற்றிருக்கிறது.
முடிவின்படி, முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி, 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு (எஸ்டிஎஃப்) ஒரே ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றியுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications