சென்ட்ரல், பெங்களூர் குண்டுவெடிப்புகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு – விசாரணைக்குழு தகவல்
பெங்களூர்: சென்னை சென்ட்ரல் இரட்டை குண்டுவெடிப்புக்கும் பெங்களூரில் இதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை குண்டுவெடிப்பு குறித்து தமிழக, கர்நாடகா போலீசார் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணைக்காக 10 பேர் கொண்ட தமிழக போலீஸ் குழு பெங்களூரில் முகாமிட்டுள்ளது.

சென்னையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பெங்களூரில் 2010 இல் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மூன்று சம்பவங்களிலும் ஒரே மாதிரியான பொருள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. "மேலும், இந்த மூன்று சம்பவங்களிலும் வெடிகுண்டுகள் தயாரிப்பு முறைகளும் கூட ஒரே மாதிரியாக உள்ளன.மூன்றுமே குறைந்த வெடிக்கும் தன்மை கொண்டவை.மிக எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையைச் சேர்ந்தவை.உலோகப் பொருளானது, முக்கிய பாகத்திலிருந்து தனியாக கழட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது" என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல்-உம்மா இயக்கத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மல்லெஸ்வரம், பெங்களூர் குண்டுவெடிப்புகளில் கைதானது குறிப்பிடத்தக்கது.
2010 இல், ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற சின்னசாமி ஸ்டேடியம் இரட்டை குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். மூன்று வருடம் கழித்து, அதே நாளில் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
"தற்போதைய விசாரணையின்படி ஒரே நபர்தான் இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.மேலும், இந்த குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட பொருள் இன்னும் அவர்களிடம் இருக்க வாய்ப்புள்ளது" என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications