ஜிஎஸ்டி... மத்திய அரசின் சாதனைகளின் மைல்கல்... வருவாய்த் துறை செயலர் பெருமிதம்
ஒரே நாடு ஒரே வரி என்று அதிரடி காட்டிவரும் மத்திய பாஜக அரசின் சாதனைகளில் ஜிஎஸ்டி ஒரு முக்கிய மைல்கல் என்று மத்திய அரசின் வருவாய்த்துறை செயலர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால், அது மிக முக்கிய மைல்கல் சாதனையாக இருக்கும் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, துர்தர்ஷன் தொலைக்காட்சியில் பேட்டியளித்த வருவாய்த் துறை செயலர் ஹஷ்முக் அதியா இந்தத் தகவலை கூறியுள்ளார் .

மேலும், அவர் பேசுகையில், மற்ற உலக நாடுகளைப் போல, இந்தியாவிலும் ஒற்றை சரக்கு, சேவை வரி விதிக்கப்படுவது அவசியம். ஒரே ஒரு அரசு இயந்திரம்தான் இதனை அமல்படுத்த வேண்டும். மாநில அரசுகளைவிட, மைய அரசின் கட்டுப்பாட்டில் ஜிஎஸ்டி இருப்பது நல்லது.
பல்வேறு வரிகளை விதிப்பதைவிட, ஏதேனும் ஒன்று அல்லது 2 வரிகள் மட்டுமே விதிக்கப்படுவது அனைவருக்கும் நல்லது,'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் வருவாய்த்துறை செயலர் சாதனை என்று கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில் பால், உணவு தானியங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே












Click it and Unblock the Notifications