Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 ஆண்டுகால வலிகளுக்குப் பின்னர் மும்பை நாரிமன் ஹவுஸ் மீண்டும் இன்று திறப்பு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் கடந்த 2008 மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய நாரிமன் ஹவுஸ் 6 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது. இதில் இன்று 25 யூத குருமார்கள் பங்கேற்று ஆசி வழங்கினர்.

நவம்பர் 2008 இல் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் நான்கு நாட்கள் சிக்கித்தவித்த இப்பகுதி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

26/11/2008 என்றால் நினைவுக்கு வரும் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கசாப் மட்டும் பிடிபட்டு தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்பட்டு விட்டது. 9 பேர் சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து வழிநடத்திய முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட யூதர்கள் வசித்து வந்த நாரிமன் ஹவுசில் 6 பேர் இறந்தனர். தாயை இழந்த 2 வயது குழந்தை மோசி மீண்டும் அவர்களின் சொந்த நாடான இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த குழந்தைக்கு வயது 6. இவர் அரசு தரப்பின் கவனத்தில் வளர்க்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நாரிமன் ஹவுஸ் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யூத குருமார்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நாரிமன் ஹவுசில் சில பகுதிகள் மியூஸியமாக மாற்றப்படும் என இதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+