திரும்ப வந்துட்டேன்... ஜன.30ம் தேதி உண்ணாவிரதம்.. அன்னா ஹசாரே அறிவிப்பு
அகமதுநகர் : மகாராஷ்டிராவில், லோக்பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்கவில்லை என்று மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை வரும் 30ம் தேதி தொடங்க உள்ளதாக சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார்.
கிசான் பாபுராவ் ஹசாரே என்ற இயற்பெயர் கொண்டு, பிற்பாடு அன்னா ஹசாரேவாக மாறிய பிரபல சமூக ஆர்வலரான அவர் லோக்பால் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

அவருடன் இணைந்து கைகோர்த்த அர்விந்த் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியின் முதலமைச்சரானார். அதன் பின்னர் கொஞ்ச காலம் பரபரப்பு இல்லாமல் காணப்பட்ட அன்னா ஹசாரே தற்போது தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க போவதாக அறிவித்திருக்கிறார்.
இம்முறை அவர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அறிவித்துள்ள காரணம், மகாராஷ்டிராவில், லோக்பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்கவில்லை என்பதாகும். இது தொடர்பாக அவர் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், மகாராஷ்டிரா அரசாங்கம் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை 2014 ஆம் ஆண்டு அமல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்த போதிலும், பிரதமர் மோடி அரசாங்கம் லோக்பால், லோகாயுக்தாக்களை நியமிப்பதில்லை.
லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றும் எண்ணம் தற்போதைய அரசுக்கு இல்லை. எனவே,இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஹசாரே.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications