நாங்கள் செய்தது கலகமென்றால், 1984, 2002ல் நடந்தது...?: பிரணாப்புக்கு ஆம் ஆத்மி கேள்வி

கடந்த வாரம், டெல்லி போலீஸ் துறையை, டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றக்கோரியும், குற்றம் சாட்டப் பட்ட சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியின் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டம் கிட்டத்தட்ட 30 மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்தது. இதனால், இந்தியாவின் தலைநகரமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப் பட்டது.
பின்னர், துணை நிலை ஆளுநர் அளித்த உறுதிமொழியை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கடந்த 25-ந் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில், ‘விளம்பரம் தேடும் நோக்கத்தில் நடத்தப்படும் கலகங்கள், ஆட்சி திறன் ஆகாது' என அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்தை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.
குடியரசுத் தலைவரின் இந்த விமர்சனத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ‘ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்தவரும், டெல்லி சட்டஅமைச்சருமான சோம்நாத் பார்தி தனது‘டுவிட்டர்' வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘ஆம் ஆத்மியின் செயல்கள் கலகம் என்றால், ‘1984 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களை ஜனாதிபதி என்னவென்று சொல்வார்? போராட்டங்கள் என்றா? நல்ல ஜோக், குடியரசுத் தலைவர் அவர்களே' எனத் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், குடியரசுத்தலைவரை சட்ட அமைச்சர் விமர்சித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் கூறுகையில், ‘ குடியரசுத்தலைவர் ஒரு ராஜதந்திரி. அவரது கருத்து, எல்லோருக்கும் வழிகாட்டும். அவரது கருத்தை விமர்சிப்பது முறையல்ல' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த டுவிட்டர் பதிவை சில மணி நேரங்களிலேயே அழித்து விட்டார் சோம்நாத் பார்தி. மேலும், தான் வலைத்தளத்தில் எதுவும் கூறவில்லை என அவர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications