மோடி பிரதமர் தான்.. அவர் ஒன்றும் மன்னர் இல்லை - சோனியா கடும் தாக்கு
ரேபரேலி: தனது மருகமன் லண்டன் நகரில் சொத்து வாங்கியதாகக் கூறப்படும் புகார் குறித்து, அரசு நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி கூறினார். மேலும், நரேந்திர மோடி பிரதமர்தான், அவர் ஒன்றும் மன்னர் இல்லை என்றும் அவர் கடுமையாக சாடியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி நேற்று தனது ரேபரேலி தொகுதிக்கு சென்றார். அப்போது சோனியா காந்தியிடம், ராபர்ட் வதோரா மீதான புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சோனியா காந்தி, ராபர்ட் வதோரா மீதான புகார்கள் என்பது 'காங்கிரஸ் அல்லாத இந்தியா' என்ற பாரதீய ஜனதா கட்சியின் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

ஆளும் பாஜகவினர் காங்கிரஸ் மீது நாள்தோறும் பொய் புகார்களை கூறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர், பின்னர் அதை திரும்பப் பெறுவது பாஜகவின் வாடிக்கையாவிட்டது என குற்றம் சுமத்தினார்.
ஆயுத விற்பனையாளர் ஒருவருடன் வதோராவுக்குள்ள தொடர்பு, மத்திய லண்டனில் இருக்கும் ஒரு வீட்டுக்கு வதோரா உரிமையாளர் என்ற விவகாரம் பற்றிய வருமான வரித்துறையினர் விசாரணை ஆகியவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த விவகாரத்தில் உண்மை இருப்பதாக கருதினால் மத்திய அரசு பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று கூறினார்.
மேலும் மத்தியில் இரண்டாண்டு ஆட்சி நிறைவடைந்ததற்கு, பிரம்மாண்ட விழா நடத்துகின்றனர். இதுபோன்று, இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. மோடி, நாட்டின் பிரதமர் தான்; மன்னர் அல்ல. நாடு முழுவதும், வறட்சி தாண்டவமாடுகிறது. வறுமை அதிகளவில் உள்ளது. விவசாயிகள், பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், ஆடம்பர விழாக்கள் நடத்துவது அவசியமா? இவ்வாறு சோனியா கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications