11 நாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சோனியா காந்தி
டெல்லி: 11 நாள் சிகிச்சைக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
ஆகஸ்ட் 3ம் தேதி வாரணாசியில் நடந்த தேர்தல் பிரசாரத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா காந்திக்கு கையில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார். அங்குள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு காய்ச்சலும், உடலில் நீர்ச்சத்து குறைந்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரது தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். 11 நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தார். இதையடுத்து இன்று காலை சோனியா காந்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் தனது வீட்டுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து கங்காராம் மருத்துவமனையின் தலைவர் டி.எஸ் ராணா கூறுகையில் சோனியா காந்தி நல்ல குணமடைந்துள்ளார். அவருக்கு தற்போது காய்ச்சல் இல்லை என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications