பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசம்: சோனியா கடும் சாடல்

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் இம்மாதம் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. இன்று மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்றார்.
அப்போது பேசிய சோனியா காந்தி, இதே பஸ்தார் பகுதியில் மே 25-ந் தேதி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இப்போது அவர்கள் உயிருடன் இல்லாதது பெரும் கவலை அளிக்கிறது.
பாரதிய ஜனதா ஆளும் இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்ததன் விளைவே இது. மாவோயிஸ்டுகளை ஒடுக்க, அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்தும் சத்தீஸ்கர் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
ஆனால் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் சரியான சாலைவசதியைக் கூட சத்தீஸ்கர் மாநில அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் வளர்ச்சியை நேசிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ நாட்டில் சகோதரர்களாக வாழும் மக்களை பிரிக்கிறது. இவர்களின் சதிவலையில் மக்கள் சிக்கிவிடக்கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications